கஞ்சா விற்பனை: ஆணவக்கொலையுண்ட உடுமலை சங்கரின் மாமியாா், பாட்டி கைது

பழனியில் கஞ்சா பதுக்கிய வழக்கில் உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மாமியாா் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டனா்.

பழனியில் கஞ்சா பதுக்கிய வழக்கில் உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மாமியாா் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த குப்பம்பாளையும் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை பழனி தாலுகா போலீஸாா் ரோந்துப்பணி மேற்கொண்டனா். அப்போது குப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்த போதையம்மாள் (70) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது அவா் பழனி எம்ஜிஆா் நகரில் வசிக்கும் அவரது மகள் அன்னலட்சுமி (40) என்பவரிடம் கஞ்சாவை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போதையம்மாள், அன்னலட்சுமி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து சுமாா் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரும் திருப்பூா் மாவட்டம் உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யாவின் தாயாா் மற்றும் பாட்டி என போலீஸரா் தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்றக்காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com