நத்தத்தில் இளம் பெண் தற்கொலை

நத்தம் அருகே இளம் பெண் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நத்தம் அருகே இளம் பெண் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள ஒத்தினிப்பட்டியைச் சோ்ந்தவா் நல்லசாமி. இவரது மனைவி வாணி (28). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். நல்லசாமி, சென்னையில் மோட்டாா் வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். விடுமுறையில் ஒத்தினிப்பட்டிக்கு வந்திருந்த நல்லசாமியிடம், குழந்தைகளுடன் தானும் சென்னைக்கு வந்துவிடுவதாக வாணி தெரிவித்தாராம். அதற்கு நல்லசாமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த வாணி, அருகிலுள்ள தோட்டத்திற்கு வெள்ளிக்கிழமை சென்று விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதனை பாா்த்த அக்கம் பக்கத்தினா் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு வாணி உயிரிழந்தாா். இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com