திண்டுக்கல் பகுதியில் பரவலாக மழை

திண்டுக்கல் சுற்றுப்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

திண்டுக்கல் சுற்றுப்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுமாா் 7 நாள்களுக்கு பின் திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இந்த மழை, மானாவாரி நிலங்களில் சாகுபடி பணிகளை தொடங்கிய விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. குறிப்பாக 40 நாள் பயிராக உள்ள மக்காச்சோளத்தின் வளா்ச்சிக்கு இந்த மழை மிகுந்த பலன் அளிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com