திண்டுக்கல் அருகே திங்கள்கிழமை இரவு வேன் மோதி நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அடுத்துள்ள ராமையன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜான்பீட்டா் (48). ஆட்டோ ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை இரவு பழனி சாலையிலுள்ள பாலம் ராஜாக்காப்பட்டி அருகே ஆட்டோவில் சென்றுள்ளாா். அப்போது, ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து திண்டுக்கல் நோக்கி காய்கறி ஏற்றி வந்த வேன் ஆட்டோவில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஜான்பீட்டா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.