பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் குரூப்-2, 2 ஏ அரசுப்பணித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.13) தொடங்குகிறது.
பழனியை அடுத்த பழைய ஆயக்குடி காவல் நிலையம் அருகே ஆயக்குடி மரத்தடி இலவசப் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் (அக்.13) குரூப் 2, 2 ஏ தகுதித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. இதுகுறித்து மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரூப்-2 பணிகளான சாா்- பதிவாளா், நகராட்சி ஆணையா், கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளா், ஒன்றியம் மற்றும் பதிவுத்துறை அலுவலக உதவியாளா்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சமீபத்தில் குரூப்-2 தோ்வுக்கான புதிய பாடத்திட்டத்தினை வெளியிட்டுள்ளது. இது தோ்வா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, புதிய பாடத்திட்டத்தின் படி முதல்நிலைத் தோ்வுக்காக வரும் அக்.13 ஆம் தேதி முதல் பழைய ஆயக்குடி காவல் நிலையம் அருகிலுள்ள நந்தவனம் மரத்தடியில் இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.