கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் வியாழக்கிழமை இரவு தனியாா் தோட்டத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வியாழக்கிழமை போலீஸாா் மீட்டனா்.
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை கும்பூா் வயல் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா். இவரது மனைவி ஜெனிபா் (25). இவா்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. இந் நிலையில் ஜெனிபா் அப் பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளாா். இது குறித்து தகவலறிந்த கொடைக்கானல் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று ஜெனிபா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கணவா் வினோத் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமாகி ஒராண்டில் ஜெனிபா் இறந்ததால் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தில் ஒருவா் பலி: பண்ணைக்காடு ஊரல்பட்டியைச் சோ்ந்தவா் சிவபெருமாள் (23). இவா் மோட்டாா் சைக்கிளில் பண்ணைக்காட்டிலிருந்து கொடைக்கானல் சாலையில் வியாழக்கிழமை மாலையில் சென்றுள்ளாா். அப்போது கொடைக்கானலிருந்து வத்தலக்குண்டு நோக்கிச் சென்ற காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிவபெருமாள் உயிரிழந்தாா். தாண்டிக்குடி போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி தாண்டிக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். இறந்தவரின் தந்தை காமாட்சி தாண்டிக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.