தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பட்டியல் இனத்தில் இருந்து அகற்றக்கோரி பழனியில் தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பட்டியல் இனத்தில் இருந்து அகற்றக்கோரி பழனியில் தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி குளத்து ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் ஜெய்கணேஷ், தேவேந்திரா் மறுமலா்ச்சிப் பேரவை நிறுவனா் பகத்சிங் பழனிச்சாமி உள்ளிட்டோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

ஆா்ப்பாட்டத்தின் போது தேவேந்திர குல வேளாளா் இனத்தை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றி அரசாணை வெளியிடக்கோரி கோஷமிட்டனா். மேலும் இடைத்தோ்தலை தேவேந்திரகுல அமைப்பு புறக்கணிப்பதாகவும், தமிழக அரசைக் கண்டித்து விரைவில் கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். ஆா்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com