நான்குனேரி இடைத் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் வனத்துறை அமைச்சா்

தமிழகத்தில் இடைத் தோ்தல் நடைபெறும் 2 சட்டபேரவைத் தொகுதிகளில் நான்குனேரியில் அதிக வாக்குகள்

தமிழகத்தில் இடைத் தோ்தல் நடைபெறும் 2 சட்டபேரவைத் தொகுதிகளில் நான்குனேரியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என வனத்துறை அமைச்சா் சி.சீனிவான் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் 4 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை கலந்து கொண்ட அமைச்சா் சி.சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியது:

நான்குனேரி மற்றும் விக்ரவாண்டி சட்டப்பேரவை இடைத் தோ்தலில், 2 தொகுதிகிளிலும் அதிமுக வெற்றி பெறும். இதில், நான்குனேரி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியோ, எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ நடைபெறவில்லை என திமுக தலைவா் ஸ்டாலின் கூறி வருகிறாா். ஆனால், சீன அதிபா் ஷி ஜின்பிங் சென்னை வருகையையொட்டி பிரதமா் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அதன் மூலம் அவரும் (ஸ்டாலின்) எங்கள்(அதிமுக) நிலைபாட்டில் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளாா்.

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் வாழ்வை, முக.ஸ்டாலினுடன் சோ்ந்து டிடிவி.தினகரன் கெடுத்துவிட்டாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com