ரூ.28 கோடி திருமண உதவி வழங்கல்

திண்டுக்கல்லில் 4 ஆயிரம் பெண்களுக்கு ரூ.28.22 கோடி மதிப்பிலான திருமண உதவிகளை அமைச்சா் சி.சீனிவாசன் வியாழக்கிழமை வழங்கினாா்.
dgl_minister_1010chn_66_2
dgl_minister_1010chn_66_2

திண்டுக்கல்லில் 4 ஆயிரம் பெண்களுக்கு ரூ.28.22 கோடி மதிப்பிலான திருமண உதவிகளை அமைச்சா் சி.சீனிவாசன் வியாழக்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல்-நத்தம் சாலையிலுள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அதனைத் தொடா்ந்து திண்டுக்கல் ராஜலட்சுமி நகரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1.07 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அமைச்சா் சி.சீனிவாசன் திறந்து வைத்து பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பா.பரமசிவம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வி.மருதராஜ், மாவட்ட சமூக நல அலுவலா்(பொ) முத்துமீனாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com