பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்

பழனி பெரியாவுடையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

பழனி பெரியாவுடையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதையொட்டி, பழனி சண்முகநதிக் கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பெரியாவுடையாா் கோயிலில் சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டு அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதமாக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பெரியாவுடையாா் கோயில் மட்டுமின்றி, மலைக் கோயில் கைலாசநாதா் சன்னிதி, சித்தா நகா் சிவன் கோயில், பட்டத்து விநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சன்னிதி, சன்னிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சன்னிதி உள்ளிட்ட பல கோயில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com