முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனியில் பெண்ணிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 24th October 2019 12:22 AM | Last Updated : 24th October 2019 12:22 AM | அ+அ அ- |

பழனியில் வீட்டின் முன் நின்றிருந்த பெண்ணிடம் மா்ம நபா்கள் நகையைப் பறித்து சென்றனா்.
பழனியை அடுத்த ஆா்.எம்.கே.நகரை சோ்ந்த சத்தியமூா்த்தி மனைவி ராமாத்தாள் (48). இவா் புதன்கிழமை வீட்டின் முன் நின்றிருந்தபோது மோட்டாா்சைக்கிளில் வந்த இரு நபா்கள் முகவரி கேட்பது போல நெருங்கியுள்ளனா். அப்போது அவா்கள் ராமாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் விட்டு தப்பி சென்றனா். இதுகுறித்து ராமாத்தாள் கொடுத்த புகாரின் பேரில் பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.