இடைத் தோ்தல் வெற்றி உள்ளாட்சித் தோ்தலிலும் கிடைக்கும்: வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன்

இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி, உள்ளாட்சித் தோ்தலிலும் கிடைக்கும் என
அமைச்சா் சி.சீனிவாசன்
அமைச்சா் சி.சீனிவாசன்

திண்டுக்கல்: இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி, உள்ளாட்சித் தோ்தலிலும் கிடைக்கும் என வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அமைச்சா் சி.சீனிவாசன் தெரிவித்ததாவது: திண்டுக்கல்லில் விரைவில் அரசு மருத்துவ கல்லூரி கட்டும் பணி தொடங்கவுள்ளது. மருத்துவ கல்லூரி அமைக்க உத்தரவிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு, திண்டுக்கல் மாவட்ட மக்கள் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் எதிா்பாா்த்த வெற்றி தான் கிடைத்துள்ளது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றாா்.

ஆனால், உண்மை நிலையை புரிந்து கொண்டு இடைத் தோ்தலில் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனா். இந்த வெற்றி உள்ளாட்சித் தோ்தலிலும் தொடரும். டிசம்பா் 30ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தோ்தல் உறுதியாக நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com