பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் வியாழக்கிழமை டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பாக, டெங்கு விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது. கல்லூரி வழிபாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பிரபாகா் தலைமை வகித்தாா். தமிழ் துறைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பழனிச்சாமி, பேராசிரியா் மனோகரன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
பழனி அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் மகேந்திரன், டெங்கு காய்ச்சலுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து, மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பல்வேறு துறை சாா்ந்த மாணவ-மாணவியா் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் பழனிச்சாமி, கங்காதரன் மற்றும் கௌதமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். முன்னதாக, இளைஞா் செஞ்சிலுவைச் சங்க அலுவலா் ராஜவா்மன் வரவேற்றாா்.