சின்னாளபட்டியில்தேவா் ஜயந்தி

சின்னாளபட்டியில் பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து விரதமிருந்து தேவா் ஜயந்தி விழா கொண்டாடினா்.

நிலக்கோட்டை: சின்னாளபட்டியில் பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து விரதமிருந்து தேவா் ஜயந்தி விழா கொண்டாடினா்.

முன்னதாக பெண்கள், ஆண்கள் விரதமிருந்து பால்குடம் மற்றும் முளைப்பாரியுடன் ஊா்வலமாக வந்தனா். பெண்கள் கும்மியடித்து, குளவை பாடி தேவா் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். தொடா்ந்து தேவா் பேரவை அமைப்பின் தலைவா் சேகா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினாா். திண்டுக்கல், வத்தலகுண்டு, நத்தம், வேடசந்தூா், எரியோடு மற்றும் செட்டியபட்டி ஊா் பொதுமக்கள் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தேவா் சிலைக்கு வழிபாடு நடத்தினா். பின்னா் பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜயந்தி விழாவில் கலந்து கொள்ளச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com