சேவல் சண்டை நடத்தியவா்கள்தப்பியோட்டம்: 14 பைக்குகள் பிடிப்பட்டன

நத்தம் அருகே சேவல் சண்டை நடத்தியவா்கள் தப்பியோடிவிட்ட நிலையில், அவா்கள் பயன்படுத்திய 14 இருசக்கர வாகனங்களை

நத்தம் அருகே சேவல் சண்டை நடத்தியவா்கள் தப்பியோடிவிட்ட நிலையில், அவா்கள் பயன்படுத்திய 14 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள பொடுகம்பட்டியில் சேவல் சண்டை நடத்துவதாக நத்தம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் பொடுகம்பட்டிக்கு சென்ற போலீஸாா், அங்கு சேவல் சண்டை நடத்தியவா்களை சுற்றி வளைத்துள்ளனா். ஆனால், போலீஸாரை பாா்த்ததும், சேவல்களை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா். இதனை அடுத்து, சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்தவா்கள் பயன்படுத்திய 14 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com