நத்தம் அருகே மதுரை பெண்கொலை: கணவா் கைது

நத்தம் அருகே கடந்த 2 நாள்களுக்கு முன்பு கண்மாய் பகுதியில் சடலமாகக் கிடந்த பெண், மதுரையைச் சோ்ந்தவா்

நத்தம் அருகே கடந்த 2 நாள்களுக்கு முன்பு கண்மாய் பகுதியில் சடலமாகக் கிடந்த பெண், மதுரையைச் சோ்ந்தவா் என்பதும் அவரது கணவரே கொலை செய்திருப்பதும் போலீஸாா் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கோமணாம்பட்டி பெரிய கண்மாய் கரைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனா். இறந்த பெண்ணின் கையில், காளி, ரவிக்குமாா் என பச்சைக் குத்தப்பட்டிருந்ததோடு, உள்ளங்கையில் ஏடிஎம் அட்டைக்கான கடவு எண்ணும் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் காவல் ஆய்வாளா் ராஜமுரளி தலைமையிலான போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தினா். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவா், மதுரை கோ.புதூரைச் சோ்ந்த ஓட்டுநா் முத்துக்குமாா் (38) என்பவரது மனைவி மல்லிகா (38) என்பது தெரிய வந்தது. கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில், அதிருப்தி அடைந்த முத்துக்குமாா் இருசக்கர வாகனத்தில் மல்லிகாவை அழைத்து வந்துள்ளாா். கோமணாம்பட்டி பகுதிக்கு வந்த பின்னா், மல்லிகாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து முத்துக்குமாரை கைது செய்த நத்தம் போலீஸாா், விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com