ஒட்டன்சத்திரத்தில் தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் விவசாயிகளால் உருவாக்கப்பட்டுள் ள கிருபா தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், அக்ரோ சர்வீஸ் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு, நபார்டு வங்கியின் உதவி மேலாளர் கே. பாலச்சந்திரன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி. மாரிமுத்து முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் எஸ். பாண்டித்துரை பங்கேற்று, அக்ரோ சர்வீஸ் மையத்தை திறந்துவைத்துப் பேசினார். தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை தரக் கட்டுப்பாடு உதவி இயக்குநர் பி. சுருளியப்பன் முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கிருபா தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்கள் தங்கத்துரை, சுஜாதா, முருகேசன் மற்றும் சிஇஒ சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிருபா தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் இயக்குநர் சிவக்குமார் நன்றி கூறினார்.