கொடைக்கானலில் வியாழக்கிழமை பிக்-அப் வாகனம் மோதியதில், கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
கொடைக்கானல் கீழ்பெருமாள் மலையைச் சேர்ந்தவர் செல்வராஜ்(48), கூலி தொழிலாளி. இவர், மேல்பெருமாள் மலைப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த பிக்-அப் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக, அப்பகுதி பொதுமக்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், செல்வராஜ் சடலத்தை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநர், கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விபத்து ஏற்படுத்தியவர் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜ் எனத் தெரியவந்துள்ளது. போலீஸார் வாகனத்தை கைப்பற்றி, தலைமறைவான ஓட்டுநர் ஜோதிராஜை தேடி வருகின்றனர்.