பன்றி வளர்ப்பதை  தட்டிக் கேட்டவரை தாக்கிய 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சோணைமுத்து (45), முருகன் (50), சரவணன் (24), மகேந்திரன் (25)

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சோணைமுத்து (45), முருகன் (50), சரவணன் (24), மகேந்திரன் (25) ஆகிய 4 பேரும் அப்பகுதியில் பன்றிகள் வளர்த்து வருகின்றனர். 
    இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மகுடீஸ்வரன் (38) என்பவர், பன்றிகளால் நோய்கள் பரவி வருவதால், பன்றிகளை வளர்க்கக்கூடாது என்று கூறினராம். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து, புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த மகுடீஸ்வரனை தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.    இதில் பலத்த காயம் அடைந்த மகுடீஸ்வரன், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் அளித்த புகாரின்பேரில், ஒட்டன்சத்திரம் போலீஸார் 4 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com