திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பழையவத்தலகுண்டுவிலுள்ள சுவாமி விவேகானந்தா கல்வி சேவா அறக்கட்டளை சார்பாக தூய்மை மற்றும் மரக்கன்று நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊர்வலத்திற்கு அறக்கட்டளை நிர்வாகி சாந்தினி தலைமை வகித்தார். அப்போது வீடு, வீடாகச் சென்று மரக்கன்று நடுங்கள் என்று பிரசாரம் செய்தனர். பின்னர் பொது இடங்களில் குப்பை கொட்டியிருந்ததை அகற்றி மரக்கன்றுகளை நட்டனர். ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.