திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே புதரிலிருந்து ஆண் சிசு ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
செம்பட்டி அருகே சி.கூத்தம்பட்டியில் உள்ள புதரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில், குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்று பார்த்த போது பிறந்து ஒரு மணி நேரமே ஆன, ஆண் குழந்தை இருந்தது. இதுகுறித்து செம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸார் சென்று, அந்த குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை யாருடையது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.