பழனி அருகேயுள்ள புதுக்குளத்தை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள குளங்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணிகளை விவசாயிகள் மட்டுன்றி, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும், மாணவர்களும் செய்து வருகின்றனர்.
அதுபோல பழனி அருகே சின்ன கலையமுத்தூரிலுள்ள புதுக்குளத்தை காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையிலான காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியில் கிராம பொதுமக்களும், ஊரக வளர்ச்சித் துறையினரும், வருவாய்த் துறையினரும் கலந்து கொண்டனர்.
இப்பணியினால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுபோல பழனி பகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரும் பணியில் அனைத்து தரப்பினரும் பங்கேற்று விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.