திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாக, பட்டிவீரன்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 270 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்காமல் உள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் நிலக்கோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் ஆகியவற்றை கண்டித்து முற்றுகை இப்போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநிலச் செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் திருச்சித்தன், வத்தலகுண்டு ஒன்றிய செயலர் பாக்கியராஜ், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் காதர் மொய்தீன், மாவட்ட பொறுப்பாளர் வான்ஸ் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தினர்.
நிலக்கோட்டை ஒன்றிய துணைச் செயலர் சுதந்திரம் மற்றும் 50 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.