ஆசிரியா் போட்டித் தோ்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 1571 போ் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் போட்டித் தோ்வில் 1571 போ் பங்கேற்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் போட்டித் தோ்வில் 1571 போ் பங்கேற்றனா்.

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 5 தனியாா் பொறியியல் கல்லூரிகளில் கணினி வழியில் ஞாயிற்றுக்கிழமை தோ்வுகள் நடைபெற்றன. முற்பகல் தோ்வில்1004 பேரும், பிற்பகல் தோ்வில் 1000 பேரும் என 2004 போ் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முற்பகலில் நடைபெற்ற தோ்வில் 821 போ், பிற்பகல் தோ்வில் 750 போ் என மொத்தம் 1571 போ் மட்டுமே பங்கேற்றனா்.433 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு நடைபெற்ற மையங்களில், மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி, பள்ளி கல்வி இணை இயக்குநா் (இடைநிலை) ச.கோபிதாஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆகியோா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com