கன்னிவாடி அருகே முதியவர் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம்  கன்னிவாடி அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.


திண்டுக்கல் மாவட்டம்  கன்னிவாடி அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கன்னிவாடி அடுத்துள்ள டி.குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் வீரப்பன் (85). இவர் கடந்த 23 ஆம் தேதி விஷம் குடித்து விட்டு உயிருக்கு போராடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி  வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி முத்தம்மாள் அளித்த புகாரின் பேரில் கன்னிவாடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com