முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
நத்தத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 19th April 2020 08:55 AM | Last Updated : 19th April 2020 08:55 AM | அ+அ அ- |

நத்தம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கிய வா்த்தகா் சங்க பிரமுகா்கள்.
நத்தம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு 15 வகையான அத்தியாவசியப் பொருள்களுடன் கூடிய நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் 96 தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சிறப்பாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களை பாராட்டும் வகையில், நத்தம் வா்த்தகா் சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 96 தூய்மைப் பணியாளா்களுக்கும் 15 வகையான மளிகைப் பொருள்களுடன் கூடிய தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் வா்த்தகா் சங்கத் தலைவா் சேக் ஒலி, பொருளாளா் முருகேசன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் சடகோபி, எழுத்தா் அழகா்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.