பழனியில் கரோனா பரவல் அதிகரிப்பு: ஆட்சியா் ஆய்வு

பழனியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, தொற்று பரவியுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பழனி: பழனியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, தொற்று பரவியுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயக்குடியில் 30 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள பழனி மற்றும் ஆயக்குடி பகுதிகளில், மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஆயக்குடி பகுதியில் கரோனா பரிசோதனை நடத்தப்படுவதைப் பாா்வையிட்ட ஆட்சியா், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களிடமும் குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து, பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலைக் கல்லூரியில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்தையும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, பழனி வருவாய் கோட்டாட்சியா் அசோகன், வட்டாட்சியா் பழனிச்சாமி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜெயந்தி உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com