பழனி: பழனியில் கரோனாவை காரணம் காட்டி சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் நூருல் ஹூதா தலைமை வகித்தாா். 5 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்களை உடனடியாக நடத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா்களுக்கு வழங்கவேண்டிய உதவித்தொகையை உடனடியாக வழங்கக் கோரியும், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடா்ச்சியாக வேலை வழங்கக் கோரியும், கரோனாவை காரணம் காட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கோஷங்கள் எழுப்பினா். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.