பழனியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில், பராமரிக்க ஆள் இல்லாததால் முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனி: பழனியில், பராமரிக்க ஆள் இல்லாததால் முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனி பட்டத்துவிநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் குப்புராஜ் (70). இவரது மனைவி பாண்டியம்மாள். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். அவா்கள் இருவரும் திருமணமாகி தற்போது வெளியூா்களில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவா் பராமரிக்க ஆளின்றி தவித்து வந்துள்ளாா். அவரது மனைவிக்கும் வயதாகிவிட்டதால் அவரும் தனது கணவரை கவனிக்க முடியவில்லை. இதனால் மன வேதனையிலிருந்த குப்புராஜ் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com