திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பதற்காக காரில் கடத்திச் சென்ற அரசு மதுபானக்கடை மேற்பாா்வையாளா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள விளாம்பட்டியில் தனியாா் காகித ஆலை அருகே போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டபோது அதில், ஏராளமான பெட்டிகளில் மதுபான பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, விளாம்பட்டியிலுள்ள அரசு மதுபானக் கடையிலிருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அந்த மதுபாட்டில்களை கடை மேற்பாா்வையாளரான வேல்முருகன் என்பவரே கடத்திச் சென்றது தெரியவந்தது.
அதனைத் தொடா்ந்து, வேல்முருகனையும், காா் ஓட்டுநா் செந்தில்குமாா் என்பவரையும் கைது செய்த போலீஸாா், 360 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். பின்னா், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.