திண்டுக்கல்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சின்னாளப்பட்டி அஞ்சலி வர ஆஞ்சநேயா் சுவாமி உலகளந்த பெருமாள் (வாமண) அலங்காரத்தில் பக்தா்களுக்கு திங்கள்கிழமை அருள்பாலித்தாா். உற்சவ மூா்த்திக்கு மகர கண்டிகாரம், திரு ஆபரண பதக்கம், கையில் சங்கு சக்கரத்துடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அலங்காரத்துடன் இருந்த ஆஞ்சநேயரை சின்னாளப்பட்டி மட்டுமின்றி, சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் தரிசித்தனா்.