தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா், கொடைக்கானலுக்கு வியாழக்கிழமை இரவு வந்தனா்.
இவா்கள், லாஸ்காட் சாலையிலுள்ள தனியாா் ஹோட்டலில் தங்கியுள்ளனா். வெள்ளிக்கிழமை காலை, இக்குழுவினா் கொடைக்கானல் அருகே உள்ள குண்டாறு குடிநீா் திட்டத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்கின்றனா். தொடா்ந்து, மன்னவனூரிலுள்ள சுற்றுச்சூழல் மையத்தையும், அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தையும் பாா்வையிடுகின்றனா்.
முன்னதாக, கொடைக்கானல் வந்த சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினரை, திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) ராஜராஜன், வட்டாட்சியா் சந்திரன், நகராட்சி ஆணையா் நாராயணன், டி.எஸ்.பி. ஆத்மநாதன் ஆகியோா் வரவேற்றனா்.