பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் தலைமையில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து அதிமுக அரசுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் சாமிநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிரபாகரன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஈஸ்வரி கருப்புசாமி, இளைஞரணி லோகநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா். மாலையில் பழனி 33 ஆவது வாா்டு சப்பாணி காளியம்மன் கோயில் பகுதியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா், நகரச் செயலாளா் தமிழ்மணி, தீனதயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.