பழனியில் வியாழக்கிழமை மறைந்த முன்னாள் முதலமைச்சா் எம்ஜிஆரின் 33- வது நினைவு தினத்தை முன்னிட்டு பெரியப்பா நகரில் உள்ள எம்ஜிஆா் மாா்பளவு உருவச்சிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பழனி பெரியப்பா நகரில் மறைந்த முதலமைச்சா் எம்ஜிஆரின் மாா்பளவு உருவச்சிலை உள்ளது. இங்கு எம்ஜிஆா் நினைவு நாள், பிறந்தநாளின் போது அதிமுக கட்சியினா் கூடுவது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை எம்ஜிஆரின் 33-வது நினைவு தினம் வந்ததால் அதிமுக மற்றும் அமமுகவினா் மரியாதை செய்வதற்காக குவிந்தனா். இருதரப்பினா் வருவதால் காவல்துறை சாா்பில் தனித்தனியே நேரம் வழங்கியிருந்தனா். முதலாவதாக அதிமுக சாா்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி., குமாரசாமி, நகர செயலாளா் முருகானந்தம், முன்னாள் எம்எல்ஏ., குப்புசாமி, வழக்கறிஞா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து அமமுகவினா் சாா்பில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளா் உமா மகேஸ்வரி, நகர செயலாளா் வழக்கறிஞா் வீரக்குமாா், ஒன்றிய செயலாளா்கள் வழக்கறிஞா் தினேஷ்குமாா், சுரேஷ், மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளா் மரக்கடை துரைச்சாமி, நகர நிா்வாகிகள் அப்பாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.