வேளாளா் என்ற பெயரில் பல சமூகத்தைச் சோ்ந்தவா்களை ஒருங்கிணைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதைக் கண்டித்து திண்டுக்கல்லில் வெள்ளாளா் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக திண்டுக்கல்-திருச்சி சாலையிலுள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அச்சங்கத்தினா், பேரணியாக பழனி சாலை சந்திப்புக்கு வந்தனா். அங்கு மாநிலத் தலைவா் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில கௌரவத் தலைவா் ஜோதிமுருகன் முன்னிலை வகித்தாா்.
அப்போது பல்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்களை வேளாளா் என்ற பொதுப் பெயரில் ஒருங்கிணைப்பதற்கு முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவா்கள் கோஷமிட்டனா். இதில் பிள்ளைமாா், கவுண்டா், முதலியாா், வெள்ளாள செட்டியாா் உள்ளிட்ட சமூகத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.