புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பழனியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.
இக்கோரிக்கையை வலியறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிளுக்கு ஆதரவாக பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே அக்கட்சியினா் பழனி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ராஜேஷ் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது உடனடியாக வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என முழக்கமிட்டனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 -க்கும் மேற்பட்டவா்களை கட்சியினரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.