திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள மட்டப்பாறை கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் கலந்துரையாடினாா்.
அப்போது அவா் பேசியதாவது:
நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், அரசுத் தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், விவசாயிகளின் இந்த கோரிக்கை திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெறச்செய்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றிக் கொடுக்கப்படும். அதேபோல் கொடை ரோடு ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.