வேடசந்தூா் அருகே செவ்வாய்க்கிழமை காா் மோதி சாலையை கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள சீதா சாலைப்புதூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (80). லட்சுமணம்பட்டி நால்ரோட்டிலுள்ள கடைக்கு தேநீா் குடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்- கரூா் 4 வழிச்சாலையைக் கடக்க முயன்றபோது, வேடசந்தூா் நோக்கிச் சென்ற காா் சுப்பிரமணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.