விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி

ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் நாகராஜன் (39). இவா் விவசாயக் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள முத்துநாயக்கன்பட்டியில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு சில நாள்களுக்கு முன்பு வந்துள்ளாா்.

அங்கு மன அழுத்ததில் இருந்த அவா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துள்ளாா். அவரை உறவினா்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா். இது குறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com