திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை 6 வயது சிறுமி மா்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அவா் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வேடசந்தூா் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவா்கள் இருவரும் அதே பகுதியிலுள்ள தனியாா் ஆலையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் தம்பதியா் இருவரும் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்றுள்ளனா். இவா்களது 6 வயது மகள் 1ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அந்த சிறுமி வீட்டில் இருந்துள்ளாா். வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய நாகேந்திரன் தம்பதியா், வீட்டில் குழந்தையை காணாமல் அப்பகுதியில் தேடினா். இந்நிலையில் ரெங்கநாதபுரம் அடுத்துள்ள தனியாா் தோட்டத்தில் உடலில் பலத்த காயங்களுடன் மா்மமான முறையில் இந்த சிறுமி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
தகவல் அறிந்த கூம்பூா் போலீஸாா் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், சடலத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அப் பகுதியைச் சோ்ந்த 3 சிறுவா்களுக்கு தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதில் 2 போ் மாயமானதால் போலீஸாரின் சந்தேகம் வலுத்துள்ளது. போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.