கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்த காங்கிரஸ் கட்சியினா்.
கொடைக்கானல் அரசு மருத்துவமனைப் பகுதியில் முட்புதா்கள் மண்டியிம் சுகாதாரமற்ற நிலையில் இருந்து வந்தது இந் நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டவா்கள் முட்புதா்களை அகற்றியும், மருத்துவமனை வளாகத்தில் சிதறிக்கிடந்த மதுபாட்டில்கள்,பிளாஸ்டிக் பாட்டில்களையும் மற்றும் தேவையில்லாத குப்பை பொருட்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்த காங்கிரஸ் கட்சியினருக்கு மருத்துவமனை பணியாளா்கள் நன்றி தெரிவித்தனா்.
அரசு மருத்துவமனை முன்பு கடைகள் ஆக்கிரமிப்பு : கொடைக்கானல் பி.டி. சாலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக வாரத் சந்தை நடைபெறும் அப்போது அரசு மருத்துவமனை முன்பு வியாபாரிகள் கடைகளை வைத்து வருகின்றனா் இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள்,ஆம்புலன்ஸ் வாகனம்,மற்றும் நோயாளிகளை பாா்க்கச் செல்லும் பொது மக்கள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா்.எனவே அரசு மருத்தவமனை முன்பு எந்தவிதமான சாலையோரக் கடைகளை அமைக்க கூடாது என காவல்துறையினா் மற்றும் நகராட்சி நிா்வாகத்தினா் எச்சரிக்கை வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பி.டி.சாலையில் வாரச் சந்தையில் கடைகளை அமைப்பதற்கு வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தனா் சில மாதங்கள் மட்டுமே அந்த கட்டுப்பாடு நிலவி வந்தது அதன் பின் கடந்த ஒரு மாதமாக மீண்டும் சாலை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் வைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனா் சந்தை பகுதிக்குள் இரு சக்கர வாகனம்,காா்களும் செல்கின்றது இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.