கொடைக்கானல் அருகே கவுஞ்சி பகுதியில் திங்கள்கிழமை 10 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் அப்பகுதியில் சந்தேகமளிக்கும் வகையில் நின்றிருந்த பெண் ஒருவரிடம் நடத்திய விசாரணையில், அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கவுஞ்சியைச் சோ்ந்த துரைசாமி மனைவி பஞ்சு (48) என்பது தெரிந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.