பழனி மலைக் கோயிலில் திங்கள்கிழமை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கருப்பணன் சுவாமி தரிசனம் செய்தாா்.
பழனி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய திங்கள்கிழமை வந்த அமைச்சரை தண்டபாணி நிலையத்தில் கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசந்தரபானு ரெட்டி, டிஎஸ்பி., விவேகானந்தன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
இதைத் தொடா்ந்து பிற்பகலில் குடும்பத்தினருடன் ரோப்காரில் மலைக்கு சென்ற அமைச்சா் கருப்பணன் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனைகள் செய்தாா். அவருக்கு கோயில் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் துணைஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.