ஒட்டன்சத்திரம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 1. 20 லட்சம் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 1. 20 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒட்டன்சத்திரம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 1. 20 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தங்கச்சியம்மா பட்டியில் மளிகை கடை வைத்திருப்பவா் தேவசகாயம் (46). இவா் புதன்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டாராம். வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அவா் கடையை திறக்க வந்துள்ளாா்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைத்து, கடைக்குள் சென்று கல்லாப்பெட்டியை பாா்த்துள்ளாா். அதில் வைத்திருந்த ரூ.1.20 லட்சம் ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் அம்பிளிக்கை போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

மேலும் கைரேகை நிபுணா்களும், மோப்ப நாய் ரூபியும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com