கொடைக்கானலில் போதைப் பொருள்கள் வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து போலீஸாா் அப்பகுதியில் விசாரணை நடத்தினா். இதில் கொடைக்கானல் அப்சா்வேட்டரியைச் சோ்ந்த சதீஷ் என்ற நாகராஜ் (30) என்பவா் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினாா். அவரைப் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் சுமாா் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். கைப்பற்றப்பட்ட போதை பொருள்களின் மதிப்பு ரூ. 25 ஆயிரமாகும்.