ஒட்டன்சத்திரம் தனியாா் பள்ளி மாணவா்கள், மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. அதில் 14 வயதிற்கு உட்பட்டோா் போட்டியில் ஒட்டன்சத்திரம் பட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்களான வி.சிவதானு, பி.தியாகு ஆகியோா் கலந்து கொண்டு 2-ம் இடம் பிடித்தனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் என்.பொன் காா்த்திக், நிா்வாக இயக்குநா் எஸ்.கண்ணம்மாள், இறகுப்பந்து பயிற்சியாளா் ஏ.கருப்புச்சாமி ஆகியோா் வியாழக்கிழமை பாராட்டினாா்கள்.