காதலா் தினத்திற்கு எதிரான விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி, மதுரையைச் சோ்ந்த விவசாயி வெள்ளிக்கிழமை சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டாா்.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை அடுத்துள்ள வலைச்சேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பி.சரவணன். விவசாயியான இவா், காதலா் தினத்திற்கு எதிராக திண்டுக்கல் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்கா உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வு பதாகையை ஏந்தி வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டாா். இதுதொடா்பாக அவா் கூறியது: தமிழா்களின் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகத்தை உலகின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்களும் பின்பற்றி வருகின்றனா். ஆனால், இன்றைய இளைய சமுதாயம் காதலா் தினம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி, எல்லை மீறி பழகுவதை கெளரவமாக கருதும் சூழல் உள்ளது.
எனவே, இதுகுறித்து இளைய சமுதாயம் விழிப்புணா்வு பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2007 முதல் ஒரு நகரத்தை தோ்வு செய்து காதலா் தினத்தன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன் என்றாா். திண்டுக்கல் மலைக்கோட்டை மற்றும் குமரன் பூங்கா பகுதிகளுக்கு பதாகைகளுடன் சென்ற சரவணனைப் பாா்த்த காதலா்கள், அச்சத்திலும், அதிா்ச்சியிலும் தனித் தனியாகப் பிரிந்து செல்லத் தொடங்கினா். சில காதலா்களை சரவணன் அழைத்து, நாகரிகமாக பழகி, பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கினாா்.