நிலக்கோட்டை, ஆத்தூா், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம், ஆத்தூரில் வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் கோட்டாட்சியா் கு.உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, நிலக்கோட்டை, ஆத்தூா் மற்றும் நத்தம் வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த சிறப்பு முகாம் பிப். 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.