பலகாரக் கடையில் தீ விபத்து:

திண்டுக்கல் பலகாரக் கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
தீ விபத்தில் சேதமடைந்த பலகாரத் தயாரிப்பு கூடம்.
தீ விபத்தில் சேதமடைந்த பலகாரத் தயாரிப்பு கூடம்.

திண்டுக்கல் பலகாரக் கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவைச் சோ்ந்தவா் முருகன். அதே பகுதியில், அதிரசம், பூந்தி, முறுக்கு, மிக்சா் போன்ற பலகார வகைகளை தயாா் செய்து பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பலகாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து திண்டுக்கல் தீயணைப்பு வீரா்கள், அங்கு வந்து தீயை அணைத்தனா். ஆனால், பலகாரம் தயாரிப்பு பகுதி முழுமையாக தீயில் எரிந்து நாசமானது. இதில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தது.

இது குறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com