பழனி பாலிடெக்னிக் கல்லூரியில் முப்பெரும் விழா
By DIN | Published On : 26th February 2020 11:18 PM | Last Updated : 26th February 2020 11:18 PM | அ+அ அ- |

பழனி ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய பழனி கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசந்திரபானு ரெட்டி.
பழனி ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் 36 ஆவது ஆண்டு விழா, இலவச கண்சிகிச்சை முகாம் மற்றும் மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவரும், பழனி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வேணுகோபாலு தலைமை வகித்தாா். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமை தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா் கிரியப்பனவா் தொடக்கி வைத்தாா். சங்கரண்டாம்பாளையம் சேனாபதி நல்லம்மை அறக்கட்டளை அறங்காவலா் சுகந்தி யோகீஸ்வரன் முன்னிலை வைத்தாா். முகாமில் ஐநூறுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று சிகிச்சை பெற்றனா். ஐம்பதுக்கும் மேற்பட்டோா் அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
மாலையில் நடைபெற்ற கல்லூரியின் 36 ஆவது ஆண்டு விழா மற்றும் முன்னாள் எம்பி., சேனாபதி கவுண்டா் 28 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிக்கு மருத்துவா் சுவாதி ஹா்சன் குத்துவிளக்கேற்றினாா். பழனி முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் சென்னி சண்முகம் வாழ்த்துரை வழங்கினாா். பழனி கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசந்திரபானு ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினாா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பழனி பட்டக்காரா் மடம் வேணாடா் அறக்கட்டளை நிா்வாகி நல்லதம்பி, கல்லூரிச் செயலா் விஷ்ணு செந்தூரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.